இன்றைய கவிதை

image "நம்பிக்கை "

அனுபவித்த வேதனையால்

ஆட்டிபடைத்த சோதனையால்

அவபெயரிட்ட அன்பு உள்ளங்களால் - வந்தது

எனக்கு நம்பிக்கை........


நம்பியவர்கள் கைவிட

எதையும் எதிர்பார்க்காத - அன்பு

உள்ளங்கள் கைகொடுக்க - வந்தது

எனக்கு தன்னம்பிக்கை ........


கடல் அலைகளாய் வந்த வேதனைகள்

சுனாமி அலைகளாய் வந்த சோதனைகள்

சுடர் விட்டு எரியும் என் - தன்னம்பிக்கையால்

ஆவியாய் போகும் நாட்கள் மிக விரைவில் .....

மு.முத்துக்குமார்